இடுகைகள்

குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)

படம்
குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)                           அன்பிற்குரியவர்களே! இஸ்லாத்தில் இரண்டே இரண்டு ஈதுப் பெருநாட்கள் மட்டுமே உள்ளன. அவ்விரண்டில் ஒன்று நோன்புப் பெருநாள் மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். இவ்விரு பெருநாட்களிலும் தனித்தனியான இபாதத்துகள் (வணக்கங்கள்) உண்டு. அதனடிப்படையில் நம்மை எதிர்நோக்கி வருகிற ஹஜ்ஜுப் பெருநாளில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான இபாதத்துதான் குர்பானி ஆகும். உழ்ஹிய்யா (குர்பானி) என்றால் என்ன?                இஸ்லாமிய மார்க்கத்தில் உழ்ஹிய்யா என்பது குறிப்பிட்ட  நாளில் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய உயிரினங்களிலிருந்து அறுக்கப்படும் பிராணிக்கு  உழ்ஹிய்யா எனக்கூறப்படும். அந்த நாளை ஈதுல் அழ்ஹா என்றழைக்கப்படும். குர்பானியின் சட்டம் என்ன?                                         குர்பானி கொடுப்பது ஹன...

நோன்பு யாரின் மீது கடமை?

படம்
நோன்பு யாரின் மீது கடமை?                எனதருமை இஸ்லாமிய நண்பர்களே! பாக்கியம் நிறைந்த ரமழான் மாதத்தின் 3 ஆம் நாள் தராவீஹில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் நோன்பு யாரின் மீது கடமை என்பது பற்றிதான்.             நோன்பு என்றால் அல்லாஹ்விற்காக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும், இன்பம் சுகிப்பதை விட்டு நீங்கி இருப்பதுமாகும். மேலும் தேவையற்ற காரியங்களை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வதாகும்.                  அல்லாஹ்விற்கு மிகப் பிடித்தமான அமல் நோன்பு. நோன்புக்கு நானே கூலி என்று ரப்பு சொல்வதிலிருந்தே நாம் நோன்பின் அந்தஸ்தை விளங்க வேண்டும். இந்த நோன்பில் மட்டும்தான் முகஸ்துதியை பார்க்க முடியாது. மற்ற அமல்கள் கூட முகஸ்துதியை (பிறருக்காகவோ, அல்லது பிறரின் பாராட்டை பெறவோ, பிறருக்கு) காட்டவோ செய்யமுடியும். ஆனால் நோன்பு மட்டும் ஒரு அடியான் தன் ரப்புக்காக, அவனது அன்பை பெறுகின்ற நோக்கில் இருக்கும்.  அதனால்தான் இறைநேசர்களும் , நல்அடியார்களும் நோன்பு நோற்ற நிலையிலேயே தன...

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

இஸ்லாம் என்றால் என்ன?                                                       மு ஸ்லிம் என்றால் யார்?                இஸ்லாம் எனும் அரபிச் சொல்லுக்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்று பொருள். அமைதி, சாந்தி எனவும் பொருள்படும்.                அனைத்தையும் படைத்து பக்குவப்படுத்தி, பரிபாலித்துவரும் ஏக இறைவனுக்கு முற்றிலும் கீழ்படிந்து அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுதல் மூலமே ஸலாம் எனும் சாந்தியையும், அமைதியையும் அடைய முடியும் என்பதையே இஸ்லாம் எனும் சொல் பிரதிபலிக்கிறது. தலைசிறந்த சிந்தனையாளர் டாக்டர். ஜோட்(Dr.Joad) கூறுகிறார்;                       ”பறவைகளைப் போன்று வானில் பறக்கவும், மீன்களைப் போன்று நீரில் நீந்தவும் நமக்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால், நிலத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை மாத்திர...

அல்லாஹ்........

அல்லாஹ்....... எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! படைப்பதும் - துயர் துடைப்பதும் என் தொழில். நானே தொட்டில் நானே சவப்பெட்டி! ஏற்றமும்,இறக்கமும்  நானே! நீரும்,நெருப்பும் நானே! பிறப்பும், அழிவும் என்னில் என்பதனால்! எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! உரிமையளிப்பதும் நானே! மன்னிப்பளிப்பதும் நானே! என்னை இறைஞ்சினால் இறங்கிவருவேன் - என்னை மறந்து போனாலும் - நான் மறப்பதில்லை! மறுப்பதில்லை!! எனக்கு இங்கே நேர் - எதிர் மனிதன்!! கேள்வியும் நானே பதிலும் நானே ஆதியும் நானே அந்தமும் நானே என்பதனால்! எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! கமுதி மீராபட்டேல் ரஹ்மத் மாத இதழ், மே - 1994

அழகுயர் திருநோன்பு!

படம்
அழகுயர் திருநோன்பு! நோன்பு........ பூவிதழாய் நற்செயலை                                       பூமிதனில் துலங்கிடவே புகழ்மிக்க இறையோனை                                      போற்றி தினம் வணங்கிடவே; பொற்புடைய நல்வாழ்வு                                      புனிதமுடன் விளங்கிடவே பூந்தென்றல் எழிலுருவாய்                                      புவிசிறக்க வந்ததுவே! நோன்பு...... துன்பம் துயரகற்றி                                    தூக்கம் உணவகற்றி தொண்டின் தூய்மை நெறி   ...

பிழை பொறுப்பாய் ரஹ்மானே!

படம்
பிழை பொறுப்பாய் ரஹ்மானே! இறை தந்தான் மாதங்கள்                        எல்லாமே நல்லவைதான்! குறையில்லை என்றாலும்                      குறிப்புடனே ரமழானை நிறைவுடனே தனதென்றான்                      நிகரில்லா நன்மை சேர் மறை தந்தான் இந்நாளில்                     மகத்துவமோ மிகப்பெரிதே! எத்தனையோ இராப்பகல்கள்                    இயங்கிவரும் பூவுலகில் அத்தனையும் அல்லாஹ்வின்                   அருட்கொடையே என்றாலும் சித்தமதை நோன்பாலே                   சீர்படுத்தும் ரமழான்தான் அத்தனைக்கும் மகுடமென்றே                   ஆக்கிவைத்தான் அருளா...

வேண்டாம் பொய் சத்தியம்

படம்
வேண்டாம் பொய் சத்தியம் إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا     يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ                       இன்றைய கால கட்டத்தில் மனிதன் எத்தனையோ பல பிரச்சனைகளை, சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பொய்கள் பலவற்றைக்கூறி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைகிறான். எதையும் நிதானிப்பதற்கு முன் அவசரப்பட்டு அந்தப் பொய்யை உறுதிபடுத்தவும் செய்கிறான். அல்லாஹ் குர் ஆனில் ”மனிதன் அவசரக்காரனாகவே இருக்கிறான்” என்று கூறியது பொய்யாகுமா!                     சிலர் சத்தியம் என்பது எனக்கு சக்கரைப் பொங்கல் மாதிரி என அலட்சியமாகக் கூறுவர். ஆனால் தேவையின்றி சத்தியம் செய்வதையும், பொய்சத்தியம் செய்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஆனால் சமுதாயம் எதையும் பொருட்பட...